Tuesday, November 25, 2008

ஈழப் பெண்மணி!!!




நாடு காக்க வீறுகொண்டு
நடக்கும் பெண்மணி – உலக
ஏடு போற்ற வாழுமெங்கள்
ஈழக் கண்மணி!
காடு மேடு கடல்வானம்
கடக்கும் அம்மணி – போர்க்
களத்தில் இன்று காடையரைத்
தகர்க்கும் பொன்மணி!
ஆண்கள் போலக் கருவிகளைச்
சுமந்து செல்லுவார் - பகை
அடுத்த நொடியே வந்துவிட்டால்
வெடித்து வெல்லுவார்
தூண்கள் போன்று படையணிக்கு
வலிமை செய்யுவார் - என்றும்
துணிந்து சென்று எதிரிகளின்
துரையைக் கொய்யுவார்!
பிள்ளை குட்டி யாவும் விட்டுப்
படையில் சேருவார் - கொடும்
கொள்ளைக் கார சிங்க ளத்தான்
தடையை மீறுவார்!
மள்ளர் போன்று வீரத் தோடு
துள்ளி ஆடுவார் - தாய்
மண்ணை மீட்கும் மானப் போரில்
வாகை சூடுவார்!
கட்டு பாடு ஒழுக்கத் தையே
பற்றிக் கொள்ளுவார் - சிங்களக்
காடை யரின்வி மானத் தையே
சுட்டுத் தள்ளுவார்!
எட்டுத் திசையும் ஈழக் கொடியை
ஏற்றி வருவார் - தலைவர்
கட்ட ளையை ஏற்று வெற்றிக்
கனியைத் தருவார்!

......தனித்தமிழ் வேங்கை

No comments: