Tuesday, November 25, 2008

ஈழப் பெண்மணி!!!




நாடு காக்க வீறுகொண்டு
நடக்கும் பெண்மணி – உலக
ஏடு போற்ற வாழுமெங்கள்
ஈழக் கண்மணி!
காடு மேடு கடல்வானம்
கடக்கும் அம்மணி – போர்க்
களத்தில் இன்று காடையரைத்
தகர்க்கும் பொன்மணி!
ஆண்கள் போலக் கருவிகளைச்
சுமந்து செல்லுவார் - பகை
அடுத்த நொடியே வந்துவிட்டால்
வெடித்து வெல்லுவார்
தூண்கள் போன்று படையணிக்கு
வலிமை செய்யுவார் - என்றும்
துணிந்து சென்று எதிரிகளின்
துரையைக் கொய்யுவார்!
பிள்ளை குட்டி யாவும் விட்டுப்
படையில் சேருவார் - கொடும்
கொள்ளைக் கார சிங்க ளத்தான்
தடையை மீறுவார்!
மள்ளர் போன்று வீரத் தோடு
துள்ளி ஆடுவார் - தாய்
மண்ணை மீட்கும் மானப் போரில்
வாகை சூடுவார்!
கட்டு பாடு ஒழுக்கத் தையே
பற்றிக் கொள்ளுவார் - சிங்களக்
காடை யரின்வி மானத் தையே
சுட்டுத் தள்ளுவார்!
எட்டுத் திசையும் ஈழக் கொடியை
ஏற்றி வருவார் - தலைவர்
கட்ட ளையை ஏற்று வெற்றிக்
கனியைத் தருவார்!

......தனித்தமிழ் வேங்கை

Oh Tamil Inamae...


ஆண்டது போதும், கலைஞரே....







ஆண்டது போதும், கலைஞரே....

பதவியைத் தூக்கிஎறியுங்கள்.

கடைசியில் "தமிழின துரோகி" என்ற

பட்டத்துடன்வரலாற்றில் வாழ வேண்டாம்.

உங்களின் அறிவு,ஆற்றல், அரசியல்ஆளுமை

உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர்.

ஆனால் தற்போது உங்களின் பதவி வெறி,

தமிழினத்திற்கேசாபம் ஆகிவிடுமோ என்ற கவலை மேலூங்குகிறது.
அரியனையைவிட்டு வெளியேறி,

உலகத்தமிழர்களின் முதல்வராக ஆகுங்கள்.

தமிழன் என்பவன் அகதியாய் வாழ்க்கையை

நடத்தியவன் என்ற வரலாற்றை ஏற்படுத்த வேண்டாம்.

மேலே உள்ள படத்தைபாருங்கள்...

மனம் வெம்புகிறது.....

தமிழனின் வரலாற்றை அன்றுபடித்து பெருமிதம் கொண்டிருந்தேன்।

இன்று அவல நிலையில்...

அநாதையை விட கேவலமாய்....???

இந்திய அரசில் பங்கு வகித்து,

தமிழ்ச் சகோதரனை சாகஅடிக்கிறீர்கள்.

பாவம்......கொடியது....அதனிலும் கொடியது,

அகதியாக்குவது.

அதைத் தெரிந்தோ/தெரியாமலோ செய்கிறீர்கள்.

பதவி சுகத்திற்காக, பாராமுகமாக இருக்காதீர்கள்....

அவன்நம் தொப்புள் கொடி உறவு.

இனியும் தாமதிக்காதீர்கள்....

அதற்குள்அநியாய,அக்கிரம இலங்கை அரசு.........

தன் மக்களையேசமாதியில் வைக்க தயங்காது.

இன்னமும் மனம் இரங்கவில்லையெனில்,

இந்தியன் என்ற பெருமையுடன் "மானாட மயிலாட" பார்த்துக் கொண்டிருங்கள்.
தமிழன் செத்துத் தொலையட்டும்....

அவன் உயிருடன்இருப்பது தானே, பிரச்சினை। கடைசி வெறி:

இந்திய அரசு ஒரே கல்லில் ,இரு காயடைத்துள்ளது।

தமிழனை சாகடிப்பது மேலும்

நிவாரண உதவி என்ற பெயரில் உலகை ஏமாற்றுவது.